ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாடகி சின்மயி. வலைத்தளங்களில் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளியிடுகிறவர். தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து சின்மயி வெளிப்படையாக தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றின் தொகுப்பு இது...
பெண்களை தவறான மனநிலையில் தொட்டு பேசுதல், அணைத்தல் போன்றவை பார்க்க சாதாரணமாக தோன்றினாலும் அவை மனதளவில் பயத்தை ஏற்படுத்துகிறவை. எனக்கு 8 அல்லது 9வயது இருக்கும். அம்மாவுடன் ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். நான் அங்கு தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ என்னை தொடுவதாக உணர்ந்தேன். இது குறித்து அம்மாவிடம் சொன்னேன். எனக்கு 10 அல்லது 11 வயது இருக்கும் டிசம்பர் மாத கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த ஒரு முதியவர் எனது தொடையை கிள்ளிக் கொண்டே இருந்தார்.
சமீபத்தில் ஒருவர் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். நானும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். காலப்போக்கில் அவர், என் கருத்துக்கு ஆதரவளிப்பதுபோன்று பாலியல் ரீதியாக பேச ஆரம்பித்தார். டார்லிங்... ஸ்வீட் ஹார்ட்... என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார். நான் அவரை தவிர்த்து விட்டேன். இப்போது எனக்கு எதிராக கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.