தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து மீண்டும் கார்த்தி நடித்து வரும் தேவ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ரகுல் பிரீத் சிங். ரஜத் ரவி சங்கர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்றபோது மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தேவ் படப்பிடிப்பு தடைபட்டது.
அதையடுத்து புனேயில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதை அடுத்து அவர் தேவ் படக்குழுவுக்கு குட்பை சொல்லியிருக்கிறார்.
முன்னதாக, அக்டோபர் 10-ந்தேதி ரகுல் பிரீத் சிங்கின் பிறந்தநாள் என்பதால், அவரது பிறந்த நாளை தேவ் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் படக்குழுவினர். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.