அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள 96 படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. தயாரிப்பாளர் நந்தகோபால் விஷாலுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராததால் இப்படம் ரிலீஸாவதில் பிரச்னை ஏற்பட்டது. விஜய் சேதுபதி அதை சரி செய்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. விஜய்சேதுபதி பேசியதாவது : 96 படம் ரிலீஸ் பிரச்னையில் யாரும் யார் மீதும் குறை சொல்ல முடியாது. என் வாழ்க்கையில் பிரச்னை வரும் போது கண்டிப்பாக அடுத்தக்கட்டத்திற்கு போவேன் என நம்புவேன். இதுபோன்று பல பிரச்னைகளை கடந்து வந்துள்ளேன்.
விஷால் எவ்வளவு பணத்தை விட்டு கொடுத்தார் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன், விமலுக்கு நடந்தது தான் இப்போது எனக்கும் நடந்து இருக்கிறது. விஷால் மீது வருத்தம் இல்லை. சினிமாவில் இது காலம் காலமாக நடக்கிறது.
சினிமா துறையில் பிரச்னை இருக்கு. அதில் 5 சதவீதம் தான் வெளியில் தெரிகிறது. மற்றவைகளை யாரும் வெளியில் சொல்ல முடியவில்லை. இந்த பிரச்னைகளுக்கு எல்லாமே தீர்வே கிடையாது. அதைப்பற்றி பேசி என்ன பயன். எனக்கு எனது படம் வெளிவர வேண்டும். மக்கள் ரசிக்க வேண்டும். சினிமா துறை சிஸ்டத்தில் குறைபாடு உள்ளது.
96 படத்தின் வெற்றி பிரேம் குமார் ஒருவருக்கே சொந்தமானது. 4-ம் வகுப்பு படித்த முதல் காதல் வந்தது. எல்லாமே ஒன்சைடு லவ் தான். மனைவியிடம் மட்டுமே காதலை சொல்லியிருக்கிறேன்.
இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.