ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள 96 படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. தயாரிப்பாளர் நந்தகோபால் விஷாலுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராததால் இப்படம் ரிலீஸாவதில் பிரச்னை ஏற்பட்டது. விஜய் சேதுபதி அதை சரி செய்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. விஜய்சேதுபதி பேசியதாவது : 96 படம் ரிலீஸ் பிரச்னையில் யாரும் யார் மீதும் குறை சொல்ல முடியாது. என் வாழ்க்கையில் பிரச்னை வரும் போது கண்டிப்பாக அடுத்தக்கட்டத்திற்கு போவேன் என நம்புவேன். இதுபோன்று பல பிரச்னைகளை கடந்து வந்துள்ளேன்.
விஷால் எவ்வளவு பணத்தை விட்டு கொடுத்தார் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன், விமலுக்கு நடந்தது தான் இப்போது எனக்கும் நடந்து இருக்கிறது. விஷால் மீது வருத்தம் இல்லை. சினிமாவில் இது காலம் காலமாக நடக்கிறது.
சினிமா துறையில் பிரச்னை இருக்கு. அதில் 5 சதவீதம் தான் வெளியில் தெரிகிறது. மற்றவைகளை யாரும் வெளியில் சொல்ல முடியவில்லை. இந்த பிரச்னைகளுக்கு எல்லாமே தீர்வே கிடையாது. அதைப்பற்றி பேசி என்ன பயன். எனக்கு எனது படம் வெளிவர வேண்டும். மக்கள் ரசிக்க வேண்டும். சினிமா துறை சிஸ்டத்தில் குறைபாடு உள்ளது.
96 படத்தின் வெற்றி பிரேம் குமார் ஒருவருக்கே சொந்தமானது. 4-ம் வகுப்பு படித்த முதல் காதல் வந்தது. எல்லாமே ஒன்சைடு லவ் தான். மனைவியிடம் மட்டுமே காதலை சொல்லியிருக்கிறேன்.
இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.