'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இப்போதல்லாம் எந்த படம் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பிறகு, திரைக்கு வருகிறதோ அதுதான் தரமான படம் என்கிற இமேஜ் உருவாகி இருக்கிறது. தரமணி, மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் அப்படித்தான் வெளிவந்தது. இதனால் தங்கள் படங்களை திரைப்பட விழாக்களில் திரையிட இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் வசந்த் இயக்கியுள்ள, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம், மும்பை திரைப்படவிழாவில் திரையிடப்பட தேர்வாகியிருக்கிறது.
கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வசந்த் தனது பெயரை வசந்த் எஸ்.சாய் என்று மாறுதல் செய்து கொண்டு இயக்கி உள்ள படம் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இதில் பார்வதி, காளீஸ்வரி சீனிவாசன், லட்சுமிபிரியா சந்திரமவுலி, சுந்தர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.