பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வாரம் லைகா தயாரிப்பில் மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' மற்றும் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' ஆகிய 2 திரைப்படங்கள் வெளியாகின.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. இரண்டும் வெற்றிப்படங்களாக அமைந்தன.
இவற்றில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'செக்கச்சிவந்த வானம்' படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.
அதேநேரம் நவாப் என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்தப்படத்துக்கு அங்கே எதிர்பார்த்த வரவேற்பும், வெற்றியும் கிடைக்கவில்லை. இப்படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸை 5 கோடிக்கு வாங்கி சில கோடிகள் பிரிண்ட் அண்ட் பப்ளிசிட்டிக்கு செலவு செய்து படத்தை வெளியிட்டனர்.
ஆந்திர ரசிகர்கள் இப்படத்தை ரசிக்கவில்லை. எனவே நவாப் படத்தை வாங்கியவருக்கு ரூ.5 கோடிக்கு மேல் நஷ்டம் வரும் என்று சொல்லப்படுகிறது.