தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அக்டோபர் 5 ஆம் தேதி ஆண்தேவதை மற்றும் எழுமின் படங்கள் வெளியாவதாக இருந்தன. கவுன்சிலின் அனுமதியில்லாமல் திடீரென நோட்டா படம் வெளியானதால் அந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் கிடைக்கவில்லை. அதனால் ஆண்தேவதை, எழுமின் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டன.
அக்டோபர் 17-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை', 18-ம் தேதி லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த 'சண்டக்கோழி 2', 'திருப்பதிசாமி குடும்பம்', 'அண்டாவ காணோம்', 'எழுமீன்' ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.
அக்டோபர் 17, 18 அன்று வட சென்னை, சண்டக்கோழி-2 ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தை வெளியிட்டால், மற்ற சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. எனவே இருவரில் யாராவது ஒருவர் உங்களுடைய படத்தை தள்ளி வையுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு விஷால், தனுஷ் இரண்டு பேருமே மறுத்துவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ சின்ன படத்தயாரிப்பாளர்கள் தான்.