தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதன் மூலம் கடந்த சில மாதங்களாக சர்ச்சை ராணியாக வலம் வருபவர் தான் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது இவரது குற்றச்சாட்டு பாலிவுட் சூப்பர் நடிகர்கள் பக்கம் திரும்பியுள்ளது.. ஆனால் வேறு விஷயத்தில்.
ஆம் கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் புகைந்து கொண்டிருக்கும் நடிகை தனுஸ்ரீ தத்தா - நானா படேகர் விஷயத்தில் அமிதாப் பச்சன், ஆமீர்கான் இருவரும் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளன. கூடவே ஸ்ரீரெட்டியின் கோபத்தையும் கிளறிவிட்டுள்ளன.
இதுபற்றி டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, “ஆமீர்கானிடம் இருந்து இதுபோன்ற பதிலை எதிர்பார்க்கவில்லை.. உண்மையான வாழ்க்கையில் நடிப்பதை நிறுத்துங்கள் ஜி. அதேபோல அமிதாப் ஜி, இதுபோன்ற பெண்களில் உங்கள் பேத்தியின் உருவத்தை உங்களால் பார்க்க முடியவில்லையா..? பெண்களை மதிக்க முடியாவிட்டால் உங்களுக்கு எந்த இந்திய தயாரிப்பையும் விளம்பரப்படுத்தும் தகுதி இல்லை. தனுஸ்ரீ விவகாரத்தில் நீங்கள் நடந்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.