டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
13 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சண்டக்கோழி படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த விஷால், ராஜ்கிரணோடு, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். லிங்குசாமி இயக்கி உள்ளார், விஷால் தயாரித்துள்ளார், யுவன் இசை அமைத்துள்ளார், சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 18ந் தேதி வெளிவருகிறது. இப்படத்தில் நடித்திருப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறியதாவது :
படத்தில் நான் சுட்டித்தனமான பெண்ணாக நடித்திருக்கிறேன். ஒரு சில காட்சிகள் தவிர மற்ற காட்சிகளில் பாவாடை தாவணி அணிந்து நடித்திருக்கிறேன். விஷாலுடன் இணைந்து நடித்த காட்சிகளை விட சில வாண்டு சிறுவர்களுடன் தான் அதிகம் நடித்திருக்கிறேன். ஊருக்குள் வம்பு பண்ணித் திரிவது தான் என்னோட கேரக்டர். ஒரு பாடல் காட்சியில் ரவிக்கை அணியாமல் நடித்திருக்கிறேன். அது சும்மா ஒரு ஜாலிக்காக, அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இந்தப் படத்தில் நடித்தபோது தான் நடிகையர் திலகம் படத்திலும் நடித்தேன். அந்தப் படப்பிடிப்பு ரொம்ப டென்சனாக இருக்கும். மேக்அப்பிலிருந்து நடிப்பு வரை அவ்வளவு கஷ்டம் இருக்கும். அதை முடித்து விட்டு இந்தப் படத்துக்கு வந்து ஜாலியாக நடித்து சார்ஜ் ஏற்றிக் கொண்டு அந்தப் படத்தில் நடிக்கச் சென்று விடுவேன். நடிகையர் திலகம் படத்தில் நான் சிறப்பாக நடித்ததற்கு காரணம் சண்டக்கோழி படப்பிடிப்பில் எனக்கு கிடைத்த ரிலாக்சும் ஒரு காரணம் என்றார் கீர்த்தி சுரேஷ்.