ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேதாஜி பிரபு என்ற இளைஞர் தயாரித்து, நடித்துள்ள படம் ஒளடதம். சமீரா ஹீரோயின். ரமணி இயக்கி உள்ளார். இந்த படம் பார்க்க வருகிறவர்களுக்கு 3 லட்சம் பேனாக்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் தயாரிப்பாளர். இந்த பேனாக்களை வழங்கும் விழா நடந்தது. இயக்குனர் கே.பாக்யராஜ் பேனாக்களை வழங்கி பேசியதாவது:
தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன். தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா? நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது.
அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. என் பாஸ்போர்ட்டில் சீல் போட இடமில்லை என்பது தான் பிரச்சினை.
அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள். சில நாடுகளில் தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால் தான் முடியும்.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.