ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் அணியினரும், இப்ராஹிம் ராவுத்தர் அணியினரும் போட்டிக்கொண்டு இருப்பதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சினிமா தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக பெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே ஆரம்பமான மோதல் இப்போது தயாரிப்பாளர்களுக்குள்ளேயே விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், பெப்சி தொழிலாளர் பிரச்னையில் தனிச்சையாக முடிவெடுத்ததாக கூறி எஸ்.ஏ.சி.,க்கு எதிராக தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்தது.
இதனையடுத்து இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் அக்குழு கூட்டிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.ஏ.சி மற்றும் அவருடன் சேர்ந்த கலைப்புலி எஸ்.தாணு மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகிய இருவரையும் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தங்களை நீக்கியது செல்லாது என்றும் முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு, தாங்கள் பதவிக்கு வந்ததாக எஸ்.ஏ.சி., அணியினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக எஸ்.ஏ.சி. கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதேபோல் இப்ராஹிம் ராவுத்தர் அணியினரும், எஸ்.ஏ.சி., அடியாட்களை வைத்து சங்கத்தை கைப்பற்ற முயல்வதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்த இரு அணியினரும் மாறி மாறி கருத்துக்களையும், புகார்களையும் கொடுத்து வந்த நிலையில் இன்று(02.05.12) எஸ்.ஏ.சி., தங்களது அணியோடு தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்ற போவதாக தகவல் வெளியானது. இதை அறிந்த இப்ராஹிம் ராவுத்தர் அணியினரும் தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்ற சங்கத்திற்கு வந்தனர். ஆனால் எஸ்.ஏ.சி., வரவில்லை. அதேசமயம் அவரது அணியை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். இதனால் எஸ்.ஏ.சி அணியினரும், இப்ராஹிம் ராவுத்தர் அணியை சேர்ந்தவர்களும் மாறிமாறி சங்கத்தில் கோஷம் போட்டபடி இருந்தனர். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இரு கோஷ்டியினரும் மோதலில் ஈடுபடுவதை தவிர்க்க தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதனிடையே வருகிற மே 30ம் தேதி தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அந்தக்கூட்டத்திலேயே தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்படும் என இப்ராஹிம் ராவுத்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.