பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள '96' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக வேண்டியது. நேற்று இரவு இந்தப் படத்தின் பிரிமீயர் காட்சிகள் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டன. அது போல சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
படத்தின் பைனான்ஸ் பிரச்சினையில் ஏற்பட்ட கடைசி நேர பஞ்சாயத்துகளால் பட வெளியீடு தாமதம் ஆனது. இதனிடையே, தனக்கு சேர வேண்டிய பாக்கித் தொகையை '96' படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் தர வேண்டி இருந்ததால் படத்தை விஷால் தடுத்து நிறுத்தினார் என தகவல் பரவியது. இது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜே. சதீஷ்குமார் வாட்சப் மூலம் தகவலைப் பரப்பினார்.
இது குறித்து விசாரித்த போது விஷால் நடித்த 'கத்திச்சண்டை' படத்தைத் தயாரித்த நந்தகோபால் தான் '96' படத்தின் தயாரிப்பாளர். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்தை முதலில் அவர் தான் தயாரிப்பதாக இருந்தது.
'துப்பறிவாளன்' படத்தைக் காட்டி பைனான்சியர்களிடம் அவர் 21 கோடி ரூபாய் கடன் பெற்றாராம். அதில் பாதித் தொகையைக் கூட அவர் விஷாலுக்குத் தரவில்லையாம். 9 கோடியை மட்டும் கொடுத்து விட்டு மீதி 12 கோடி ரூபாய் பாக்கி வைத்தாராம். கடைசியில் விஷாலே அந்தப் படத் தயாரிப்பை ஏற்று படத்தைத் தயாரித்து முடித்து வெளியிட்டார். அந்த சமயத்திலேயே விஷால் மேலும் 6 கோடிகளை விட்டுக் கொடுத்தாராம். அவருக்கு பாக்கியாகத் தர வேண்டிய 6 கோடி ரூபாயை நந்தகோபால் 96 வெளியீட்டிற்கு முன்பாகத் தருவதாக உறுதி அளித்திருக்கிறார் அதன்படி அவர் தராமல் இழுத்தடித்திருக்கிறார்.
6 கோடி தர வேண்டியதில், கடைசியில் சுமார் ஒன்றரை கோடி மட்டுமே அவர் விஷாலுக்குக் கொடுத்திருக்கிறார் நந்தகோபால். அதையும் வாங்கிக் கொண்டு படத்திற்கான தடையில்லா கடிதத்தை விஷால் கொடுத்துவிட்டாராம். ஆனால், தயாரிப்பாளரின் பழைய கடன் பாக்கியால்தான் '96' படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதாம். 'கத்திச் சண்டை, துப்பறிவாளன்' ஆகியவற்றிக்கான கடன் பாக்கி விவகாரம் கடைசி நிமிடத்தில் பிரச்சினையாகி உள்ளது.
மேலும், '96' படம் வெளிவந்தால் மற்றொரு படத்திற்குப் பாதிப்பாக இருக்கும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் சில தயாரிப்பாளர்கள் '96' படம் வெளிவராத அளவிற்கு எப்படியாவது நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தாகவும் திரையுலகில் கூறப்படுகிறது.
கடைசியில் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவடைந்து '96' இன்று காலை காட்சி முதல் வெளியாகும் சூழல் உருவாக்கப்பட்டது.