ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகத்தில் மணிரத்னம் என்று சொன்னாலே ஒரு பிரமிப்பு இருக்கும். அந்த அளவிற்கு பல மாறுபட்ட படங்களைக் கொடுத்தவர். கடந்த சில ஆண்டுகளாக அவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள், ரசிகர்களுக்கு முழு திருப்தியைத் தரவில்லை. கடந்த வாரம் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'செக்கச் சிவந்த வானம்' படம் அந்தக் குறையைப் போக்கிவிட்டது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, படத்தைப் பார்த்து பயங்கரமாகவே பாராட்டித் தள்ளியிருக்கிறார். “செக்கச் சிவந்த வானம், பிரமாதமான நடிப்பு, ஏஆர் ரகுமான் ஈடு இணையேயில்லை. சந்தோஷ் சிவன் உண்மையாகவே கிளாஸ். மணிரத்தினத்தின் ரசிகனாக, சென்னை தியேட்டர்களில் அவருடைய படங்களைப் பார்த்து கைதட்டியவன், எனது வீட்டு ஹோம் தியேட்டரில் அதையே செய்தேன்.
படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் போய் உடனே உங்களது டிக்கெட்டை வாங்குங்கள். ஒரு கிளாசிக் படத்திற்கு சான்றாக இருப்போம். இந்த பத்தாண்டின் சிறந்த படம். மாஸ்டர் எப்படி திரும்பி வந்திருக்கிறார் தெரியுமா,” என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் மகேஷ் பாபு.