பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'பரியேறும் பெருமாள்'. விமர்சகர்களின் பாராட்டுக்கள், ரசிகர்களின் பாராட்டுக்கள் என படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று என்று படம் பார்த்த அனைவருமே பாராட்டுகிறார்கள்.
அதே சமயம் படத்திற்கான தியேட்டர்கள் கிடைப்பதில் படக்குழுவினர் ஒரு சாதிய பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 'பரியேறும் பெருமாள்' சாதிப் பிரிவினையை சொல்லும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என படக்குழுவினர் சார்பில் அவர்கள் நெருங்கிய வட்டம் தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள்.
இது சம்பந்தம்மாக தயாரிப்பாளர் சங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என படத் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் ஒரு பதிவு செய்தார். அதற்கு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, பட வெளியீட்டில் சங்கங்களின் தலையீடு இல்லை என்று பதிலளித்திருந்தார். அருவி, மாநகரம் ஆகிய படங்களுக்கும் பின்னர்தான் தியேட்டர்கள் அதிகரித்ததாக அவருடைய அனுபவத்தைத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் தொடர்ந்து 'பரியேறும் பெருமாள்' படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து திரையுலகத்திலேயே பலரும் விமர்சித்து வருகிறார்கள். பெரிய நடிகர்களின் படங்களுக்குத்தான் எளிதில் தியேட்டர்கள் கிடைக்கும். 'பரியேறும் பெருமாள்' படம் வெளிவந்த சமயம் தவறு. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்தை விடவும் அந்தப் படம் நன்றாக இருந்தாலும் அது போன்ற பெரிய படங்களுடன் போட்டி போட்டு வந்ததை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும்.
அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு என முன்னணி நடிகர்கள் இருக்கும் போது வியாபார ரீதியாக அந்தப் படத்திற்குத்தான் தியேட்டர்காரர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். ரஜினிகாந்தை வைத்து 'கபாலி, காலா' ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். அந்தப் படங்கள் வெளிவந்த போது எத்தனை சிறிய படங்கள் தள்ளி வைக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாதா ?. அப்போது அது பற்றி அவர் வாயே திறக்கவில்லை. இப்போது அவர் தயாரித்த படத்திற்கு சிக்கல் என்று வரும் போது சிறிய படம், நல்ல படம் என்று பேசுகிறார் என்றும் அவர்கள் குற்றம் சொல்கிறார்கள்.
'பரியேறும் பெருமாள்' படத்தை சாதி வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் பார்த்து பாராட்டுகிறார்கள் என்பதை படக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் திரையுலகத்தில் தேவையற்ற ஒரு சாதிய பிரிவினையை அவர்கள் ஏற்படுத்தக் கூடாது என்று பலரும் கவலை தெரிவிக்கிறார்கள்.