தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள பரியேறும் பெருமாள் படம் சமீபத்தில் வெளிவந்தது. கதிர், ஆனந்தி நடித்துள்ளனர். இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. பரியேறும் பெருமாள் சிறு பட்ஜெட் படம் என்பதால் அதற்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டிருந்தது. அதனுடன் வெளியான மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் மல்டி ஸ்டார் படம் என்பதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டது.
தற்போது பல திரைப்பட முன்னணியினர் பரியேறும் பெருமாள் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர் சங்க பொருளாளரும், தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு, "தமிழ்த்திரை வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவே காட்சிகள் அதிகரிப்பை உறுதி செய்திருக்கிறது. இதில் சங்கங்களின் தலையீடு எப்பொழுதும் இருந்ததில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவமும் கூட( அருவி, மாநகரம் ). மக்கள் ஆதரவைப் பரியேறும் பெருமாள் பெற்றுவிட்டது. காட்சிகள் உயரும்” என்று தெரிவித்துள்ளார்.
செக்க சிவந்த வானம் படமும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. பரியேறும் பெருமாளுக்கு வரவேற்பு கூடிக் கொண்டிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை விஜய் சேதுபதியின்ன 96, வஜய் தேவகொண்டாவின் நோட்டா, உள்ளிட்ட சில படங்கள் வெளிவருகிறது. இதனால் பரியேறும் பெருமாளுக்கு தியேட்டர்களை அதிகரிக்க முடியவில்லை.
அதனால், தற்போது ஓடும் தியேட்டர்களில் காட்சிகளை அதிகப்படுத்தி உள்ளனர். ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்ட தியேட்டர்களில் 3 காட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுக்க ஒரு நாளைக்கு 100 காட்சிகளுக்கு மேல் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக படத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.