டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்தவாரம், செக்கச்சிவந்த வானம் படம் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை, அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், செக்கச்சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரய வசனத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் வெடிகுண்டு வீசப்படும் என மிரட்டியிருக்கிறார். அலுவலகத்தில் மணிரத்னம் இல்லை, அங்கிருந்தவர்கள் இதுப்பற்றிய தகவலை அவருக்கு சொல்ல, பின்னர் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.