'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் படம் தேவ். ரஜத் ரவி சங்கர் இயக்கும் இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்து வந்தபோது மழை, நிலச்சரிவு காரணமாக அங்கு போடப்பட்டிருந்த செட் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. அதையடுத்து அங்கிருந்து படக்குழுவினர் பாதுகாப்பாக சென்னை திரும்பினர். அந்த வகையில், குலுமணாலியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் தேவ் படக்குழுவுக்கு ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடர தற்போது கார்த்தியின் தேவ் படக்குழு புனேயில் முகாமிட்டுள்ளது. குலுமணாலியில் படமாக்க முடியாத முக்கிய காட்சிகள் புனேயில் தான் படமாகிறதாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த தேவ் படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.