'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படம், தீபாவளி வெளியீடாக இருந்து, பின்னர் பட வேலைகள் தாமதமானதால் தள்ளிவைக்கப்பட்டது. இது சூர்யா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது. அதோடு இப்படம் குறித்த அப்டேட்களையும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடவில்லை.
இதனால், சூர்யாவின் ரசிகர்கள் என்ஜிகே தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் இணையபக்கத்திற்கு சென்று விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது ஒரு டுவீட் வெளியிட்டுள்ளார் எஸ்.ஆர்.பிரபு.
அதில், "செப்டம்பர் மாதம் என்ஜிகே குறித்த அப்டேட் எதுவும் இல்லை. ஆனால் அக்டோபரில் கண்டிப்பாக என்ஜிகே பற்றி அதிக அப்டேட் இருக்கும். மேலும், குரு பெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லனும் முருகா" என்றும் பதிவிட்டுள்ளார்.