'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
சித்து பிளஸ்-2 சாந்தினி மார்க்கெட்டில் பெரிய இடத்தை பிடிக்கவில்லை என்றபோதும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதோடு, பல நாயகிகளில் இருக்கும் படங்களிலும் நடிக்கிறார்.
இதுபற்றி சாந்தினி கூறுகையில், நான் சினிமாவில் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்றுதான் வந் தேன். ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. எனக்கு பிறகு என்ட்ரியான நடிகைகள் பலர் முன்னணி நடிகையாகிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனபோதும், யார் மீதும் எனக்கு ஈகோ இல்லை. எனக்கு கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறேன். அதேசமயம், படத்தில் நான்கு காட்சிகளில் வந்தாலும் என் கேரக்டர் பேசப்படும்படியாக இருக்க வேண் டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதனால்தான், பல நாயகிகள் நடிக்கும் படங்களிலும் நான் நடிக்கிறேன். அவர்களுக்கு என்னை விட பெரிய வேடமாக இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எனக்கு கிடைத்த கேரக்டரில் நல்ல பர்பாமென்ஸை வெளிப்படுத்தி பெயர் வாங்க வேண்டும் என்பதிலேயே எனது கவனம் உள்ளது என்கிறார் சாந்தினி.