தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தி சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் கவிதா ராதேஷ்யம். பான்ஞ் செண்ட்லி மெயின் பான்ஞ் குரோர் என்ற படத்தில் அறிமுமான கவிதா. அதன் பிறகு இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் டேன்ஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் கவிதா. ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் ஜெயம்ரவியின் 24வது படத்தில் கவிதா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். தமிழுக்கு வருவது குறித்து கவிதா கூறியதாவது:
தென்னிந்திய படங்களில் நடித்தாலும் தமிழில் நடிக்காமல் இருந்தது ஒரு குறையாகவே இருந்தது. இப்போது அது நீங்கி விட்டது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சொன்ன கதையும், கேரக்டரும் பிடித்து விட்டதால் உடனே ஒப்புக் கொண்டேன். எனது கேரக்டர்தான் படத்தை முன்னெடுத்து செல்வதாக இருக்கும். இது தவிர தமிழ், கன்னடத்தில் தயாராகும் இன்னொரு படத்திலும் நடிக்க இருக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றார். கவிதா