அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
நேபாளி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள், ஏமாலி படங்களை இயக்கிய வி.இசட் துரை, அடுத்து இயக்கும் படம் இருட்டு. ஸ்கிரீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தர் சி. போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாடல் அழகி சாக்ஷி பர்வீந்தர் நடிக்கிறார். இப்போது இருட்டு டீமில் தன்ஷிகாவும் இணைந்திருக்கிறார். இவர்கள் தவிர விடிவி.கணேஷ், யோகிபாபு, உள்பட பலர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
"படப்பிடிப்புகள் கடந்த சில வாரமாக ஊட்டியில் நடந்து வந்தது. இங்கேயே 85 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அது கிராபிக்ஸ் தொடர்புடைய காட்சி என்பதால் ஐதராபாத் மற்றும் சூரத்தில் நடக்கிறது.
இது புதுமையான ஹாரர் படம். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்" என்கிறார் இயக்குனர் வி.இசட் துரை.