ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள இவர், தமிழில், நடிகர் விஷாலுடன், தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து உள்ளார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது, நானா படேகர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து, படக் குழுவினருக்கு தெரிந்தும், அவரை எதுவும் கேட்கவில்லை. நானா படேகர் பற்றியும், அவர் நடிகையரை எப்படி நடத்துவார், எந்த நோக்கத்தில் பழகுவார் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றார். ஆனால், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை, நானா படேகர் மறுத்தார்.
இந்நிலையில் மற்றுமொரு இயக்குநர் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை கூறியிருக்கிறார் நடிகை தனுஸ்ரீ. இதுகுறித்து அவர் கூறுகையில், 2005-ம் ஆண்டு, சாக்லேட் : டீப் டார்க் சீக்ரெட்ஸ் படத்தில் நடித்தபோது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, செட்டில் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆடுமாறு கூறினார். அப்போது நடிகர்கள் இர்பான் கான் மற்றும் சுனில் ஷெட்டி தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்றார்.
தனுஸ்ரீ அடுத்தடுத்து கூறி வரும் குற்றச்சாட்டுகள் பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே தனுஸ்ரீக்கு ஆதரவு தெரிவித்து, பாலிவுட் பிரபலங்களான, பிரியங்கா சோப்ரா, பர்ஹான் அக்தர், டுவிங்கிள் கன்னா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
டுவிட்டரில் பர்ஹான் அக்தர் கூறுகையில், தனுஸ்ரீயின் தைரியத்தை, அனைவரும் பாராட்ட வேண்டும், என்றார்.
அமிதாப் பச்சனிடம் இது குறித்து கேட்ட போது, நான், தனுஸ்ரீயும் இல்லை; நானா படேகரும் இல்லை என, காட்டமாக பதில் கூறினார்.
இதற்கிடையே, தனுஸ்ரீ மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, நானா படேகரின் வழக்கறிஞர், நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.