பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவகார்த்திகேயனின் நண்பர் என்ற விசிட்டிங் கார்டு அருண்ராஜா காமராஜுக்கு சினிமாத் துறையில் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. பாடலாசிரியராக அறிமுகமான அவர், குறுகிய காலத்திலேயே அனிருத், ஜி.வி.பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன் முதலானோர் இசை அமைப்பில் பல படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றார்.
உச்சமாக, ரஜினி நடித்த கபாலி படத்தில் நெருப்புடா என்ற பாடலை எழுதும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுதியதில்லை. அந்த குறையும் இப்போது தீர்ந்துவிட்டது.
இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கி வரும் படம் 'சர்வம் தாள மயம்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் அறிமுக பாடலான 'பீட்டர் பீட் ஏத்து' என்று துவங்கும் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.
இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். இந்த பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன் முதலாக இணைந்துள்ளார் அருண்ராஜா காமராஜ். மியூசிகல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள 'சர்வம் தாள மயம்' விரைவில் வெளியாகிறது.