தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இளம் தெலுங்கு நடிகர்கள் நேரடியாக தமிழ்ப் படங்களில் அறிமுகமாக அதிக ஆர்வம் கொண்டுள்ளார்கள். மகேஷ் பாபு, கடந்த ஆண்டு அறிமுகமானார். எதிர்பாராதவிதமாக அவர் அறிமுகமான 'ஸ்பைடர்' படம் படுதோல்வியடைந்தது. அடுத்து நாகசௌரியா சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'தியா' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப்படமும் படுதோல்வியைச் சந்தித்தது. இப்போது விஜய் தேவரகொண்டா அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ள 'நோட்டா' படம் மூலம் அறிமுகமாக உள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நடிகரான அல்லு அர்ஜுன், தமிழில் அறிமுகமாக உள்ளதாக 2016ம் ஆண்டே அறிவித்தார்கள். சென்னையில் உள்ள பிரபர நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மிகப் பிரம்மாண்டமாக அதன் துவக்கவிழாவும் நடைபெற்றது. ஆனால், அதன்பின் அந்தப் படம் பற்றிய சத்தத்தையே காணோம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் அல்லு அர்ஜுன் அறிமுகமாக உள்ள படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, அல்லு அர்ஜுனை வைத்து படம் தயாரிக்கப் போவதாக அறிவித்த ஞானவேல்ராஜா விரைவில் அந்தப் படம் துவங்கலாம் என்று தெரிவித்துள்ளார். அப்போது சொன்னபடி லிங்குசாமி தான் அந்தப் படத்தை இயக்குவாரா அல்லது வேறு யாரும் இயக்குவார்களா என்பது விரைவில் தெரிய வரும். இப்போதாவது இந்தப் படம் ஆரம்பமாகுமா அல்லது மீண்டும் தகவலோடு நின்றுவிடுமா என்பதுதான் தமிழ்நாட்டில் உள்ள அல்லு அர்ஜுன் ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.