தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக சமந்தா தான் அதிகமாக டிரோல் செய்யப்பட்டு வருகிறார். அவரது கணவர் நாகசைதன்யாவுடன் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு கிளாமரான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதற்கு ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவிட்டனர். திருமணத்திற்குப் பிறகு அம்மாதிரியான கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும் மறுநாளும் மற்றுமொரு புகைப்படத்தை வெளியிட்டார் சமந்தா. ரசிகர்களின் கமெண்ட்டுகளும் தொடர்ந்தது. இரண்டு புகைப்படங்களுக்கும் சேர்த்து சுமார் 15 லட்சம் லைக்குகளும், 8 ஆயிரம் கமெண்ட்டுகளும் வந்தன.
ரசிகர்களின் கமெண்ட்டுகளால் சமந்தா அது போன்ற கிளாமர் புகைப்படங்களை இனி வெளியிடமாட்டார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அடுத்த அதிரடியாக அவருடைய கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் மேலும் ஒரு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. நேற்று அவர் வெளியிட்ட இந்தப் புகைப்படத்திற்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.
ரசிகர்களின் கமெண்ட்டுகளால் புகைப்படங்களைப் பகிர்வதில் சமந்தா யு டர்ன் அடிப்பார் என்று எதிர்பார்த்தால் அவர் அதே பாணியிலேயே பயணித்து வருகிறார்.
அது மட்டுமல்ல, “திருமணத்திற்குப் பிறகு நான் எப்படி வாழவேண்டும் என்று சொல்பவர்களுக்கு,” என பதிவு ஒன்றைப் போட்டு நடுவிரலைக் காட்டும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு நன்றி என்று சொல்லியிருக்கிறார்.