மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
முகவரி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட் துரை. சில மாதங்களுக்கு முன்னர் இவர் இயக்கிய ஏமாலி படம் வெளியானது. சமுத்திரகனி, அதுல்யா ரவி நடித்த இந்தப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அடுத்தப்படியாக இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். சுந்தர்.சி, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக, போலீஸாக நடிக்கிறார். கிரிஷ் இசையமைக்கிறார். இந்திரா சௌந்தர்ராஜன் வசனம் எழுத, ஸ்க்ரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் திகில் படமாக உருவாகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
தற்போது சுந்தர் சி, சிம்புவை வைத்து 'அத்தரண்டிகி தாரேதி' தெலுங்கு படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார்.