ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆரம்பத்தில் தமிழ் சினிமா பக்கம் அவ்வளவாக ஆர்வம் காட்டாத மலையாள நடிகர் பஹத் பாசில், கடந்த ஆண்டு வெளியான 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழ் திரையுலகுக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதேசமயம் அவராகவே வேண்டாம் என விலகிய மணிரத்னம் படமான செக்க சிவந்த வானம் இன்று வெளியாகியுள்ளது.
இருந்தாலும் மலையாளத்தில் தனது 'வரதன்' படம் வெளியாகி ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறார் பஹத் பாசில். இந்தநிலையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த 'சூடானி ப்ரம் நைஜீரியா மற்றும் அருவி ஆகிய படங்களை பார்த்தபிறகு, அவற்றில் தன்னுடைய பங்களிப்பும் இருந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார் பஹத் பாசில்.