இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
இயக்குனர் பா.ரஞ்சித், தனி இசை கலைஞர்களுக்கு உதவுவதற்காக தனது நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் பல உதவிகளை செய்து வருகிறார். கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், ரூட்ஸ் என்ற பெயரில இசை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார். தற்போது அவரின் இந்தப் பணியில் இசை அமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஆப் தமிழா ஆதி இணைந்துள்ளார். இதற்காக நடந்த நிகழ்ச்சியில் ஆதி பேசியதாவது:
தனியிசைக் கலைஞனாக எனது ஆரம்பகாலத்தில் எதாவது ஒரு மேடை கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். தனியிசைக் கலைஞனாக இருந்து இப்போது இசையமைப்பாளராக நடிகனாக வந்திருக்கிறேன். சுதந்திர இசை இங்கு வெற்றிபெறும் சூழல் அதிகம் இல்லை இன்னும் ஏராளமான கலைஞர்கள் சின்ன வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மேடையில் பல திறமையாளர்களை கண்டுகொண்டேன் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. வரும் காலங்களில் நானும் இது போன்ற சுதந்திர இசை மேடையை உருவாக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.