டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி பாதையை உருவாக்கிக் கொள்ள நினைப்பவர்கள் ஓரளவிற்கு முன்னேறிவிடுவார்கள். ஆனால், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு அவர்களைப் போலவே தாங்களும் வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தடுமாறித் தேங்கிவிடுவார்கள்.
ஆனந்தமாய் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தாலும் அகலக் கால் வைத்ததால் மிகப் பெரும் கடனாளியாகி, தன் சொந்த அலுவலகத்தைக் கூடப் பறிகொடுத்தவர் அந்த சாமி இயக்குனர். அவருக்கும் சங்கத் தலைவர் நடிகருக்கும் சண்டை முடிந்து ஒரு வழியாக இரண்டாவது கோழி படத்தை முடித்துவிட்டார்கள்.
வர உள்ள படங்களில் இந்தப் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நிஜம். படத்தின் வெளியீட்டுத் தேதியையும் குறித்துவிட்டார்கள். ஆனாலும், படம் திட்டமிட்டபடி வருமா என்பது சங்கத் தலைவருக்கும் மேல் உள்ள பஞ்சாயத்து ஆட்களிடம்தான் உள்ளதாம். சாமி இயக்குனர் அவருடைய முந்தைய பல கோடி பாக்கிப் பணத்தை செட்டில் செய்தால் மட்டுமே இரண்டாவது கோழி சரியான சமயத்தில் வரும் என்கிறார்கள்.
சங்கத் தலைவரா, பஞ்சாயத்து ஆட்களா என்ற பஞ்சாயத்து விரைவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.