'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல கன்னட நடிகர்களான தர்ஷன், தேவராஜ் அவரது மகன் பிரஜ்வல் ஆகியோர் நேற்று முன்தினம் மைசூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு காரில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை டிரைவர் அந்தோணி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு மைசூர் அருகே உள்ள இன்சுல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் போடப்பட்டிருந்த தடுப்பில் திடீரென கடுமையாக மோதியது.
இதில் மூன்று பேருமே பலத்த காயம் அடைந்தனர். தர்ஷனுக்கு கை எலும்பும், தேவராஜூக்கு விரல் எலும்புகளும் முறிந்தது. பிரஜவிற்கு மட்டும் லேசான காயம் ஏற்ட்டது. காயம் அடைந்தவர்களை உடனடியாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கை எலும்பு முறிந்துள்ள தர்ஷன் ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.