சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
விக்ரமின் மகன் துருவ். அமெரிக்காவில் நடிப்பு, இயக்கம் படித்து விட்டு பாலா இயக்கும் வர்மா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இது தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன்ரெட்டி படத்தின் ரீமேக். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் துருவ், வர்மா படத்திற்காக தனக்கு தரப்பட்ட சம்பளத்தை அப்படியே கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கினார். இதற்காக கேரளா சென்ற அவர் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து இந்த நிதியை வழங்கினார். அவருடன் வர்மா படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பளார் ஏவி.அனுப், விக்ரம் ரசிகர் மன்றத் தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோரும் சென்றனர். அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே கேரள வெள்ள நிவாரணத்துக்கு விக்ரம் 25 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.