‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுர் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சுமார் 140 பேர் குலுமணாலி சென்றிருந்தனர். நடிகர் கார்த்தி, இயக்குனர் ரஜத், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அங்கு ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தில் படக்குழுவினரும் சிக்கிக் கொண்டார்கள்.
இதனால் படப்பிடிப்பை தொடர்ந்த நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது கார்த்தி மணாலியிலிருந்து சென்னைக்குத் திரும்பி விட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில், “எங்களில் சிலர் நேற்று இரவு சென்னை திரும்பிவிட்டோம். இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் குழுவினர் இன்னும் மணாலியில் பத்திரமாக இருக்கிறார்கள். மின்சாரம், சாலை வசதி இல்லாததால் அவர்கள் ஒரு நாள் கழித்துதான் இறங்க முடியும். மழை சீக்கிரமே நிற்கும் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.