சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுர் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சுமார் 140 பேர் குலுமணாலி சென்றிருந்தனர். நடிகர் கார்த்தி, இயக்குனர் ரஜத், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அங்கு ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தில் படக்குழுவினரும் சிக்கிக் கொண்டார்கள்.
இதனால் படப்பிடிப்பை தொடர்ந்த நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது கார்த்தி மணாலியிலிருந்து சென்னைக்குத் திரும்பி விட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில், “எங்களில் சிலர் நேற்று இரவு சென்னை திரும்பிவிட்டோம். இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் குழுவினர் இன்னும் மணாலியில் பத்திரமாக இருக்கிறார்கள். மின்சாரம், சாலை வசதி இல்லாததால் அவர்கள் ஒரு நாள் கழித்துதான் இறங்க முடியும். மழை சீக்கிரமே நிற்கும் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.