ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
பாலா இயக்குநரான அறிமுகமான சேது படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாலாவை திரும்பிப்பார்க்க வைத்தது. அதோடு, நீண்டகாலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
அதன்காரணமாகவே தனக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திக்கொடுத்த பாலாவின் இயக்கத்திலேயே தனது மகன் துருவ்வையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்ரம், தற்போது பாலாவின் இயக்கத்தில் வர்மா படத்தில் தனது மகனை நடிக்க வைத்து அவரது மோதிரக்கையினால் குட்டு வாங்க வைத்து விட்டார்.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடந்தது. அப்போது வர்மா படத்தில் துருவிடம் பணியாற்றியது பற்றி பாலா கூறுகையில், துருவை சின்ன வயதில் இருந்தே எனக்கு தெரியும். எதையும் ரொம்ப உன்னிப்பாக கவனிப்பான். அதனால் அவனிடம் வேலைவாங்குவது கடினமில்லை என்பது எனக்குத் தெரியும். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் முதல் நாளிலேயே எனது கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டான் என்று கூறினார்.
அதையடுத்து விக்ரம், துருவ் இருவரில் யாரிடம் வேலை வாங்குவது எளிதாக இருந்தது என்று தொகுப்பாளினி டைரக்டர் பாலாவிடம் கேட்டபோது, மேடையில் தன்னுடன் நின்று கொண்டிருந்த விக்ரமைப்பார்த்து, விக்ரமை விட துருவிடம் வேலை வாங்குவதுதான் எளிதாக இருந்தது என்று ஜாலியாக சொல்ல, அவரை கட்டித்தழுவிக்கொண்டார் விக்ரம்.