இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீமராஜா படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. அதன் காரணமாக சிவகார்த்திகேயன் - ஆர்.டி ராஜாவுக்கு கடன் ஏற்பட்டுள்ளது.
சீமராஜாவைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கும் படம், எம்.ராஜேஷ் இயக்கும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடிய இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை 24 AM STUDIOS நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடனை அடைப்பதற்காக 24 AM STUDIOS நிறுவனத்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ஆர்.ரவிகுமார் இயக்கும் படமும், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமும் இந்நிறுவன தயாரிப்பில் உருவாக இருப்பதால் இது அந்நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் நடிக்கும் ஐந்தாவது படம்.
2016-ல் வெளியான ரெமோதான் இந்நிறுவனத்தின் முதல் படம். இந்த படத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.