சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் துல்கர்சல்மான், தற்போது பாலிவுட்டிலும் நுழைந்திருக்கிறார். இந்நிலையில் துல்கர்சல்மான் அளித்து ஒரு பேட்டியில், நான் சினிமா உலகில் எனது தந்தை மம்மூட்டியின் பெயரை ஒருபோதும் பயன்படுத்த நினைத்ததில்லை. அவர் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சபதம் எடுத்தபடிதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என் சொந்த அடையாளத்தை உருவாக்கவே நான் விரும்புகிறேன். அதோடு, இப்போதும் எனது தந்தையுடன் அமர்ந்துதான் நான் நடிக்கும் படங்களை பார்க்கிறேன். என் நடிப்பை அவர் அரிதாகவே பாராட்டுகிறார். அதேசமயம், என் படங்களைப்பார்த்து விட்டு அவர் சிரித்துக்கொண்டே போனால், அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக நான் கருதிக் கொள்கிறேன் என்கிறார் துல்கர் சல்மான்.