ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. கடந்த வாரத்தில் 6 போட்டியாளர்களாக இருந்தவர்களில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட தற்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளனர்.
இறுதிப் போட்டிக்கான டாஸ்க்குகள் இந்த வாரம் கடுமையாக இருக்கலாம். எந்த ஆண் போட்டியாளரும் இல்லாத இறுதிப் போட்டி எப்படியிருக்கும் என்பதிலும் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மிகவும் நியாயமாக செயல்பட்ட யாஷிகா வெளியேறிய போது பேசிய பேச்சுகள் ரசிகர்களிடம் அவருக்கென ஒரு தனி இமேஜை உருவாக்கியுள்ளது. ஐஸ்வர்யா இறுதிப் போட்டியில் இடம் பெற்றுள்ளதை ஒவ்வொரு வாரமும் வாக்களிக்கும் ரசிகர்களே விரும்பவில்லை. அதில் ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள். அந்த அரசியலுக்கு கமல்ஹாசனும் உடந்தையாக இருக்கிறாரோ என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
நிகழ்ச்சியின் 67வது நாளில் வந்து இணைந்த விஜயலட்சுமி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதும் நியாயமானதாக இல்லை என்றே பலரும் கருதுகிறார்கள். முதல் சீசனை விட இந்த இரண்டாம் சீசனில் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் எழுந்தாலும் இறுதிக் கட்ட பரபரப்பு அதிகமாகவே உள்ளது.
வரும் ஞாயிறு அன்று நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக இறுதிப் போட்டி நடக்க உள்ளது. ஜனனி, ரித்விகா ஆகியோரில் இருவர்தான் பிக் பாஸ் 2 சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை மீறி வேறு ஏதாவது நடந்தால் ரசிகர்களின் சாபத்திற்கு இந்த நிகழ்ச்சி ஆளாகும் என்பதே உண்மை.