டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக தற்போது கே.பாக்யராஜ் பொறுப்பேற்றுள்ளார். முன்பு தலைவராக இருந்த விசு தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதில் 37 லட்சம் நிதி வைத்துள்ளார். அந்த நிதியை தற்போதுள்ள நிர்வாகத்திடம் அவர் ஒப்படைக்க மறுப்பதாக தெரிகிறது. இதனால் விசு மீது பாக்யராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நிதி மோசடி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விசுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ள விசு, கே.பாக்யராஜ் மீது அவதூறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் இருந்த நாட்களில் இந்தியா திரும்பியவுடன் அறக்கட்டளை விஷயத்தை பேசி சுமூகமாக முடிக்கிறேன் என்று ஆர்.கே.செல்வமணியிடம் சொன்னேன். அதற்குள் இங்கு எத்தனை குழப்பங்கள். வந்தவுடன்தானே ஒவ்வொன்றாக தெரிகிறது. என் மீதும் பிறைசூடன், மதுமிதா ஆகியோர் மீதும் மோசடி, அபகரிப்பு, கூட்டு சதி, கையாடல் ஆகிய கேட்டாலே காதுகள் கூசக்கூடிய மூன்றாந்தர வார்த்தைகளை உள்ளடக்கிய புகார் ஒன்றை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர்கள் கொடுப்பார்களாம். எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் எங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்குமாம்.
ஆனால் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாவற்றையும் துடைத்து போட்டு விட்டு, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வெள்ளையும் சொள்ளையுமாக வரவேண்டுமாம். இது என்ன அராஜக எதிர்பார்ப்பு? நாங்கள் வர மாட்டோம். ஆனால் கண்டிப்பாக கிரிமினல் வழக்குக்கான அவதூறு நோட்டீசு எங்கள் சார்பில் விரைவில் பாக்யராஜ், மனோஜ்குமார், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு வரும். இது பயமுறுத்தல் அல்ல. பணிவான தகவல். படித்து பார்க்காமல் கையெழுத்து போடும் பழக்கமுள்ள ஒரு தலைமையிடம் நியாயம் கேட்கும் சட்ட ரீதியான அணுகு முறை. இவ்வாறு விசு கூறியுள்ளார்.