ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ், ரஹ்மான் நடிப்பில் ரணம் என்கிற படம் வெளியானது.. நிர்மல் சஹாதேவ் என்பவர் இயக்கிய இந்தப்படம் வெளிநாட்டு கேங்ஸ்டர் சண்டையை பின்னணியாக கொண்டு உருவாகி இருந்ததால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை..
இந்தப்படம் வெளியான ஒருவாரம் கழித்து ஒரு பேட்டியில் பிருத்விராஜ் பேசியபோது, "சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை அடைவது எனது நோக்கமல்ல.. கூடே மாதிரி படம் ஓடும் என்பது தெரியும்.. ரணம் மாதிரியான படங்கள் சரியாக போகாது என தெரியும். அதனால் வெற்றி தோல்வி பற்றி கவலைப்பட கூடாது. பரிசோதனை முயற்சியாக வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை" என கூறியுள்ளார்.
பிருத்விராஜின் இந்த பேச்சு ரணம் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான பிஜூ தாமஸை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. இதுகுறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள பிஜூ தாமஸ், "ஒரு படம் தியேட்டர்களில் ஒடிக்கொண்டு இருக்கும்போதே, அது சரியாக போகவில்லை என பிருத்விராஜ் சொல்லியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் சோதனை முயற்சியாக வித்தியாசமான படங்களில் நடிக்கவேண்டும் என்றால் தனது சொந்த பணத்தில் நடிக்கவேண்டும் தவிர தயாரிப்பாளர் காசை காரியாக்க கூடாது" என காட்டமாக கூறியுள்ளார்.