சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இயக்கியவர் சிம்புதேவன். அதையடுத்து விஜய் நடித்த புலி படத்தை இயக்கிய அவர், மீண்டும் வடிவேலு நடிப்பில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தை இயக்க தயாரானார்.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், சில தினங்களிலேயே அவருக்கும், வடிவேலுவுக்குமிடையே படம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வடிவேலு இனிமேல் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு மதுரையில் போய் உட்கார்ந்து கொண்டார்.
அதையடுத்து அப்படத்தை தயாரித்த டைரக்டர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இதனால் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்துக்காக ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் செலவு செய்த பணத்தை வடிவேலு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியது. அதோடு, வடிவேலு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படியான சூழ்நிலையில், இனிமேலும் வடிவேலுவை நம்பிக்கொண்டிருப்பதில் பலன் இல்லை என்பதை புரிந்து கொண்ட சிம்புதேவன், அடுத்தபடியாக வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படம் சிவாஜி நடித்த அந்த நாள் படம் பாணியில் உருவாகிறதாம். இதில் 6 வித்தியாசமான கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.