தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2. இதனை காமெடி நடிகர் மனோபாலா தயாரித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு மனோபாலா 1 கோடியே 79 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். இந்த பாக்கியை வசூலித்து தரும்படி அரவிந்த்சாமி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மனோபாலா, படம் வெளியீட்டுக்கு முன்பு சம்பள பாக்கியை கொடுத்து விடுவதாகவும் முதல்கட்டமாக அக்டோபர் 10ம் தேதிக்குள் 25 லட்சம் கொடுப்பதாகவும், நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் படத்தை வெளியிட மாட்டேன். என்று உத்தரவாதம் அளித்தார்.
மனோபாலாவின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அக்டோபர் 12ந் தேதி, இருதரப்பினரும் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் சம்பள பிரச்சினை பற்றி பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.