தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய திரைப்பட வர்த்த சபை (பிலிம் சேம்பர்) தற்போது இரண்டாவது கட்டடத்தை கட்டுவதில் தீவிரமாக இருக்கிறது. முதலாவது கட்டத்தின் மாடியில் தயாரிப்பாளர் சங்கம், சேம்பர் இயங்கி வருகிறது. மற்ற பகுதிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டாவது கட்டடத்தில் பிரமாண்ட திரையரங்கம், டப்பிங். எடிட்டிங் தியேட்டர்களும் கட்டப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்திற்கும், சேம்பருக்கும் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகமும் அமைய இருக்கிறது.
இந்த கட்டடத்திற்கு திரைப்பட நட்சத்திரங்கள் நன்கொடை வழங்கி வருகிறார்கள். நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறார். முதல்கட்டமாக 50 லட்சம் கொடுத்துள்ளார். இதனால் வளாகத்தில் அமைய இருக்கும் தியேட்டருக்கு சிவகுமார் பெயர் சூட்டப்படுகிறது. தற்போது கலைப்புலி எஸ்.தாணு, 50 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். வளாகத்தில் அமைய இருக்கும் மீட்டிங் ஹாலுக்கு தாணுவின் பெயர் சூட்டப்படுகிறது. தாணு நேற்று திரைப்பட வர்த்தக சபை தலைவர் காட்டரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா, கட்டட குழு தலைவர் கல்யாண் ஆகியோரிடம் 50 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார்.