வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
விஜய் தொலைக்காட்சியில் அரண்மணை கிளி எனும் புதிய தொடர் வருகிற 24ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கெனவே பிக்பாஸ் ஒளிப்பரப்பாகி வரும் நேரத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாக இருப்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது.
கன்னட சீரியல் நடிகர் தர்ஷன் ஹீரோவாகவும், மோனிஷா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். நீலிமா வில்லியாக நடிக்கிறார். அணில் இயக்குகிறார். ஜான்சன் இசை அமைக்கிறார்.
அர்ஜுன், அவன் தாய் மீனாட்சி இருவருக்குமே ஜானுவை சுத்தமாகப் பிடிக்காத நிலையில், அந்த வீட்டுக்கு வாழ வருகிறாள் ஜானு. எல்லோருடைய வெறுப்புகளையும் மீறி, அந்த வீட்டிலுள்ளவர்களில் மனதில் ஜானு இடம்பிடித்தாளா அல்லது துரத்தப்பட்டு அந்த இடத்துக்கு வேறொருத்தி வந்தாளா என்பதுதான் அரண்மணை கிளியின் கதை.