தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய வம்சா வழியைச் சேர்ந்த சன்னி லியோன், கனடாவில் பிறந்து வளர்ந்தவர். போர்னோகிராபி எனப்படும் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றவர். ஹிந்தி பிக்பாஸ் மூலம் இந்தியாவுக்கு வந்தவர், பின்னர் பாலிவுட் நடிகை ஆனார். வடகறி என்ற தமிழ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடிய சன்னி லியோன் தற்போது வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சன்னி லியோனின் பல சாதனைகளை பாராட்டும் விதமாக டில்லியில் உள்ள மேடம் டுசாட் என்ற மெழுகு சிலை மியூசியத்தில் சன்னி லியோனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இதே மியூசியத்தில் தான் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஸ்ரீதேவி உள்பல பல பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசியத்துக்கு சென்று தனது சிலையை பார்வையிட்டார் சன்னி லியோன். பின்னர் அதன் அருகில் நின்று விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது : எனது பூர்வீக மண்ணில் எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம் இது. இதை உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டுகிறேன். மிகவும் நேர்த்தியாக இதனை உருவாக்கி இருக்கிறார்கள். மகிழ்ச்சியான உணர்வை இந்த சிலை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. என்கிறார் சன்னி லியோன்.