ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் மோகன்லால்-பிரியதர்ஷன் என்கிற எவர்கிரீன் கூட்டணி தற்போது மரைக்கார் ; அரபிக்கடலின்ட் சிம்ஹம் என்கிற படத்தில் இணைந்துள்ளது. மிக பிரமாண்டமாக சுமார் நூறுகோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் மாற்றமொழிகளில் இருந்து முக்கிய நட்சத்திரங்களை தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.
அந்தவகையில் நடிகர் பிரபு, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்தநிலையில் நடிகர் அர்ஜுனும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அர்ஜுன் நடிக்க வந்து இந்த 37 வருடங்களில் கடந்த 2010ல் வந்தே மாதரம் என்கிற ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவான அந்தப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த அர்ஜுன், தற்போது முதன்முறையாக மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. நவ-1ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது..