ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் நடித்த பிறகு அனுஷ்காவின் இமேஜ் வேறு ஒரு கட்டத்திற்குச் சென்றுவிட்டது. பல நூறு கோடி வசூலைக் கொடுத்த படத்தில் நடித்தாலும் அதன்பின் அவரைத் தேடி வாய்ப்புகள் போகவில்லையா, அல்லது வந்த வாய்ப்புகளை அவர் விரும்பவில்லையா என்று தெரியவில்லை. பாகுபலி 2 படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து வெளிவந்த பாகமதி படமும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படம் வெளிவந்து எட்டு மாதங்கள் ஆன பின்னும் அனுஷ்கா வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது தெலுங்கில் நாகார்ஜுனா நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்காக அவரிடம் பேசி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்திருந்தாலும் அனுஷ்காவை தங்களது படங்களில் நடிக்க வைக்க தற்போதைய இளம் ஹீரோக்கள் விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 35 வயதை அவர் கடந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாத அளவிற்கு அவருடைய தோற்றம் மாறிவிட்டது.
30 வயதைக் கடந்த த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் இன்னமும் தோற்றத்தில் இளமையைக் காப்பாற்றி வரும் நிலையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக குண்டாக மாறியதே அனுஷ்காவின் வாய்ப்புகள் குறைவதற்குக் காரணம் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. அதே சமயம் அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண வதந்திகள் வந்ததும் காரணம். எப்படியோ இன்னும் சில வருடங்களாவது அனுஷ்கா நடிப்பாரா என்று அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.