கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் டயானா எரப்பா. மாடலிங் துறையில் இருந்த வந்த இவர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி....
7 ஆண்டுகள் மாடலிங் துறையில் இருந்தேன். என் புகைப்படங்களை பார்த்து, செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதல்படமே மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தமிழ் சினிமாவின் ஜாம்பவானான அவரின் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. படப்பிடிப்பில் குரு போன்று இருந்து நடிக்க சொல்லி கொடுத்தார். சிம்பு திறமையான நடிகர். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நடிகர்களிடமிருந்தும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைத்தது.
நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. தேசிய அளவில் கூடைப்பந்து விளையாட்டில் பங்கேற்றுள்ளேன். தடகளத்திலும் பங்கேற்றுள்ளேன். விளையாட்டு தவிர்த்து கதக் மற்றும் கிளாசிக்கல் நடனம் நன்றாக ஆடுவேன்.
செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அடுத்தடுத்து, அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. எனக்கு பிடித்த கதைகளில் நடிக்க விரும்புகிறேன். தமிழ், மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்று எல்லா மொழிகளிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். காமெடி, அட்வென்சர் என எல்லா விதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆசை.
இவ்வாறு டயானா கூறினார்.