தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமானவர் பிஎஸ்.மித்ரன். முதல் படத்திலேயே திரும்பி பார்க்க வைத்தவர், அடுத்தப்படியாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பாளரான 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.
இரும்புத்திரை படம் போன்று சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் உடன் த்ரில்லர் கதையில் இப்படம் உருவாக இருக்கிறது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகின்றன.
ராஜேஷ் எம் மற்றும் ரவிக்குமார் படங்களை முடித்துவிட்டு மித்ரன் இயக்கும் படத்தில் இணைகிறார் சிவகார்த்திகேயன்.