ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
திறன் இந்தியா திட்டத்தின் துாதர்களாக, பாலிவுட் பிரபலங்கள், வருண், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். திறமையான கலைஞர்களையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் நோக்கில், திறன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தை, மக்களிடையே பிரசாரம் செய்யும் துாதர்களாக, ஹிந்தி திரைப்பட நடிகர் வருண், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, இவர்கள் இருவரும் இணைந்து நடித்த குறும்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊசியும் நுாலும் - இந்திய தயாரிப்பு என்ற பெயரில், ஹிந்தியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம், 28ம் தேதி வெளியாகிறது.
இது குறித்து, மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர்துறை அமைச்சருமான, பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கை : சமூகத்துக்கு நல்ல தகவல்களை தரும் திரைப்படத்தில், பிரபல நடிகர்கள் நடிப்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று. தொழில் துவங்கும் ஆர்வத்துடன் உள்ள இளைஞர்களால் தான், நாடு வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.