ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாடோடிகள், பட்டத்து யானை, கோரிப்பாளையம் உள்பட பல படங்களை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். கடந்தாண்டு சிம்பு நடித்த, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்தார். இந்தப் படத்திற்க சிம்பு சரியாக ஒத்துழைக்காததாலும், அவரது தலையீட்டாலும் தனக்கு 20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனை சிம்பு திருப்பி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் இருவரையும் அழைத்து சமாதானம் செய்தது. இதில் சிம்பு ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பித்தர ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு, அடுத்து தற்போது சுந்தர்.சி இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதனால் தனக்கு நஷ்ட ஈடு தராத வரையில் சிம்பு படத்தில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்பு கொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும். என்கிறார் மைக்கேல் ராயப்பன்.