பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான 16வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் நடக்கும் என்று தெரிகிறது. இந்த விழாவுக்கு தமிழக அரசு நிதி உதவி செய்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புயல், வெள்ள பாதிப்பு காரணமாக நிதி உதவி வழங்கவில்லை.
இந்த ஆண்டு 16வது சர்வதே திரைப்பட விழாவுக்கு முதல்வரை சிறப்பு விருந்தினராக அழைக்க விழாக்குழு முடிவு செய்தது. இதற்காக நேற்று விழாக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அப்போது விழாவுக்கு அழைப்பு விடுத்ததோடு நிதி தொடர்பான கோரிக்கையையும் வைத்தனர்.
இண்டோ சினி அப்ரிசேஷன் செயலாளரும், சர்வதேச பட விழா ஒருங்கிணைப்பாளருமான தங்கராஜ், நடிகர்கள் மோகன், மனோபாலா, கோபி கிருஷ்ணா, நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், குட்டிபத்மினி, லிஸி, சைலஜா ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதல்வரும் உறுதி அளித்திருக்கிறார்.